Tuesday, November 25, 2008

தினமலர் "இயக்குனர் பாரதிராஜா பிரிவினை பேச்சு"

தினமலர் சொல்லியிருக்கு "இயக்குனர் பாரதிராஜா பிரிவினை பேச்சு"

விளக்கமான செய்தியின் உள்ளே, பாரதிராஜா அவர்கள் கீழ்கன்டவாறு சொன்னதாக சொல்லியிருக்கு.

"ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது வலுப் பெற்றால் தமிழகம் பாகுபட்டுவிடும்"

தமிழகம் பாகுபட்டுவிடும் என்றுதானே சொல்லியிருக்கார், இதில் என்ன பிரிவினை யாகிப்போச்சு?.

அதைப்பேசக்கூடாது இதைப்பேசக்கூடாதுன்னு சிறுபிள்ளைகளைபோல நடத்தியது எல்லாம் அந்தக்காலம். காலம் மாறிபோச்சு இப்ப. இதை நினைச்சுதானே தினமலர், தினமனி, இந்து எல்லாம் அலறு அலறுன்னு அலறுதுங்க.

என்னகொடுமை இது.
எல்லோரும் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு, என்னடா எங்கள் உறவினர்கள் அங்கே சாகிறார்கள் அதுக்கு அழுகுறது தப்பா? அப்படி சாகடிக்காதேன்னு சொல்லுறது தேச குற்றமா?

இறையான்மை இறையான்மைன்னு சொல்லுறீங்களே. தமிழ்நாட்டிலுள்ள நிலக்கரி, மிண் உற்பத்திநிலையத்தின் மிண்சாரம் எல்லாத்தையும் எடுத்துட்டு தமிழ்நாட்டுக்கு தன்னி இல்லைன்னு சொல்லுது கர்நாடகமும், கேரளாவும். அப்ப இறையான்மை நல்லா வாழுதா?

சரிப்பா அப்புடி தமிழர்களுக்காக மட்டும் தமிழ்நாட்டை பிரிச்சா என்னப்பா? அதுக்கு ஏன் இப்புடி பயந்து சாகுறீங்க? தமிழர்கள் இல்லாம தனியா உங்களால வாழ முடியாதா?

No comments: